Thursday, December 17, 2009

வலியின் பாதை

"மக்களுக்கான போராட்டம் என்றால் நமக்கு வெகு ஜன ஆதரவு அவஸ்யம் தேவை. மக்களுடன் நாம் ஒன்றாக கலக்காவிட்டால் எதிர்காலத்தில் நாம் தனிமைபடுத்தப்பட்டவர்களாக ஆக்கப்படுவோம்"  இது தொடக்கம் முதலே உமா மகேஸ்வரனின் சிந்தாந்தம்.

" மக்களுக்குத் தேவை செயல் மட்டுமே.  வெறும் வாய்ப்பேச்சு அல்ல"  இது பிரபாகரனின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் கடைபிடித்த கொள்கை.

முடிவான செயல் என்று எதை நாம் உருவாக்குகிறோமே அதன் விளைவுகளையும் விபரீதங்களையும் நாம் தான் சமாளிக்க வேண்டும்.  வெறும் அரசியல் பேச்சுகள் பேசியது போதும் என்பது போல பிரபாகரனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கோர்த்து மாலையாக மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தது.

"இது வரையிலும் செய்த மொத்த கொலைகளையும் நாங்கள் தான் செய்தோம்"  என்று உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டு வீரகேசரியில் வெளியான போது தான் பிரபாகரன் குறித்த அச்சமும் அவரின் கொள்கைகள் குறித்த தாக்கமும் அனைவருக்கும் புரியத் தொடங்கியது.

அன்று முதல் இன்று வரையிலும் உலகமெங்கும் தீர்வு காணப்படாத மொத்த பிரச்சனைகளும் அரசாங்கத்தின் பார்வையில் பட வேண்டும், அவர்களின் கவனம் திசை திருப்பப்படவேண்டும் என்றால் கையாளும் வன்முறைகள் தான் இறுதித் தீர்வாக இருக்கிறது.  தெலுங்கானா வரைக்கும்.

பிரபாகரன் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது தீர்க்கப்படவேண்டியது என்பதை ஆட்சியாளர்களின் கவனம் பெற வைக்க வேண்டும் என்று தொடக்கத்தில் தொடங்கியது தான், பயணித்த வந்த பேரூந்தை ஆட்கள் அணைவரையும் இறக்கி விட்டு கொளுத்தியது.  அதுவே வளர்ச்சி பெற்று அரசியல் அமைப்புச் சட்டம் தீர்மானமாய் (1978) கொண்டு வரப்பட்ட போது AVRO 748 ரத்மலானாவிலிருந்து பாலை செய்யும் விமானத்தை ஆட்கள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு (செப்டம்பர் 7) குண்டு வைத்து தகர்க்கும் அளவிற்கு முன்னேறியது.

அந்த வெற்றிக்குப் பிறகு இணைந்தவர்கள் தான் ரகு, சதாசிவம் பிள்ளை என்ற கிட்டு, மாத்தையா. ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபாகரன் இயக்கத்தில் சேர்ந்து கொண்டுருந்த இளைஞர்கள் பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள்.  கல்லூரியில் தமிழன் என்பதால் இடம் மறுக்கப்பட்டவர்கள், காவல்துறை பணிக்கு இதே காரணத்தால் மறுக்கப்பட்டவர்கள், கண் எதிரே கற்பழிக்கப்பட்ட தங்கை, அம்மா என்று பார்த்து புத்தி பேதலித்தவர்கள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.

காரணம் அப்போதைய சூழ்நிலையில் அஹிம்சை வழியில் நம்பிக்கை இழக்காமல் போராடிக்கொண்டுருந்த மிதவாத தலைவர்களிடம் இந்த ஆயுதப்பாதை சலசலப்பை உருவாக்கியிருந்தது. அதே காலகட்டத்தில் கியூபாவில் நடந்த (1979) உலக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாடு நடக்க அங்கு உரையாற்ற வேண்டிய அறிவார்ந்த கருத்துக்களை எழுதும் பொருட்டு அறிமுகமானவர் தான் ஆன்டன் பாலசிங்கம்.

வீரகேசரியில் பணிபுரிந்த பத்திரிக்கை ஆசிரியர்.செய்தியாளர், உயர்கல்வி கற்ற யாழ்பாண தமிழர், பிரிட்டீஷ் தூதரகப்பணியில் இருந்தவர்.  தொடக்கத்தில் திருமணம் செய்திருந்த பெண் இறந்த காரணத்தால் தன்னிடம் இருந்த நீரிழிவு நோயையையும் பொருட்படுத்தாமல் அடேல் என்ற ஆஸ்திரிய நர்ஸ்யை திருமணம் செய்து கொண்டு (1978) பின்னாளில் லண்டனில் வாழ்ந்து கொண்டுருந்தவர்.

1979 ஆம் ஜெயவர்த்தனே உருவாக்கிய "மொத்த உள்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளின் அமைப்புகளையும் தடை செய்கின்றேன்" என்று சொல்லி இருந்தால் அது ஒரு சட்டக்கடமை ஆகியிருக்கும்.  ஆனால் அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட போதே "உங்கள் வானாளவிய அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று பச்சை விளக்கை காட்டியதும் தொடர்ந்து உருவான கலவரங்களும், கண்ணீர்களும் மொத்தமாக ஆயுதப்பாதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.

படித்தவர், படிக்காதவர், நடந்துகொண்டுருந்தவர்கள், பள்ளிக்குச் சென்று கொண்டுருந்தவர்கள் என்று தொடங்கி தமிழன் என்றாலே நீ தீவிரவாதி என்று கோரத் தாண்டவம் தொடங்கியது.  விதவிதமான சித்ரவதைகள், அச்சமூட்டும் அவஸ்த்தைகள். இலங்கையில் ஆண்ட மொத்த ஆட்சியாளர்களை விட இப்போது ஆட்சி புரிந்து கொண்டுருக்கும் ஜெயவர்த்தனே என்ற ஒரு தனி மனிதரால் பிரபாகரன் எந்த அளவிற்கு மூர்க்கத்தனமாக வளர்ந்தாரோ அந்த அளவிற்கு மொத்த தமிழர்களின் முகவரியும் முடங்கப்பெற்று, தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் சுடுகாடாய் மாற்றம் பெறத் தொடங்கியது.

"நயவஞ்சகன்" என்ற பட்டம் ஜெயவர்த்தனேக்கு தமிழர்கள் மட்டும் கொடுக்கவில்லை.  ஆண்ட சீறீமாவோ, சார்ந்து இருந்த அமிர்தலிங்கம் என்ற அத்தனை பேர்களும் எள்ளும் கொள்ளும் வெடித்து கொடுத்த பட்டங்கள்.  அந்த அளவிற்கு ஒரு தீர்க்கதரிசியாய், ஞானி போல் ஒவ்வொரு காரியத்தையும் சுருதி சுத்தமாய் செய்து கொண்டுருந்தார்.

அதுதான் பிரபாகரன் வார்த்தைகளில் "  அவர் மட்டும் உண்மையான பௌத்தராக வாழ்ந்து இருந்தால் நான் ஆயுதம் தூக்க வேண்டிய அவஸ்யம் இருந்து இருக்காது" என்பது போல் மாறியது.  சேனநாயகா ஆட்சி முதல் அரசாங்கத்தில் இருப்பவர்.  ஒவ்வொரு கால காட்டத்திலும் அவருடைய பதவிகள் மாறியிருக்கும்.  எதிர்கட்சி என்ற போதிலும் அவருடைய மொத்த எண்ணங்களும் "தமிழர் எதிர்ப்பு" என்ற விதத்தில் ஒரு இம்மி அளவு கூட மாற்றம் பெறவில்லை.
முழுப்பெயர்  (Junius Richard Jayewardene ) ஜுனியஸ் ஜெயவர்த்னே.  சுப்ரிம் கோர்ட் நீதிபதியின் மகன்.  கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியவர்.  டட்லி சேனநாயகா (சிங்களர்களின் தந்தை) ஆட்சிகாலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். முப்பது வருடங்கள் காத்து இருந்து ஆட்சியை பிடித்தவர்.  ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் குறித்து எந்தப் புகார் பட்டியல் வந்தாலும் உடனே "அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தான் தொடங்கி வைப்பார்.  உருவாகும் கலவரம் முற்றுப்பெறும் போது தமிழர்களின் சொத்தும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டு இருக்கும்.  ஒரே பாதை. கொள்கை.  ஒரே தீர்மானம்.

இவர் இந்த அளவிற்கு தமிழர்கள் மேல் வெறுப்பு கொண்டுருந்தமைக்கு ஒரு பழைய பமையும் காரணமாய் இருந்தது.  1977 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது (துரையப்பா மைதானம்) தான் பேசிக்கொண்டுருந்த மேடை மொத்தமாக சரிய வைக்கப்பட்டு அவமானம் பெற்ற சம்பவம் அவர் ஆழ்மனதில் பதிந்து போயிருந்தது.  காரணம் அப்போது அந்த நிகழ்வை நிகழ்த்தியவர்கள் EROS  குழுவினர்.

ஆண்டு விட்டுச் சென்ற அத்தனை ஆட்சியாளர்களும் இது சிங்கள நாடு என்ற முன்னேற்பாடுகளைச் செய்தார்களே தவிர இவர் ஆட்சிகாலத்தில் அதை நடைமுறையாக மாற்றம் செய்தவர். சீறிமாவோ பண்டார நாயகா தோற்கடிப்பட்டு நடந்த எட்டாவது பொதுத்தேர்தலில் வென்று ஆட்சியைப்பிடித்த ஜெயவர்த்னேவுக்கு ஆதரவு கரம் நீட்டி எதிர்க்கட்சி பதவியை வாங்கிக்கொண்டு அலங்கரித்தவர் அமிர்தலிங்கம். தந்தை செல்வா இறந்த பிறகு அவரால் முன் மொழியப்பட்ட புகழ்பெற்ற தனி நாடு தான் இனி தீர்வு என்ற "வட்டுக்கோட்டை தீர்மானத்தை" கையில் எடுத்துக்கொண்டு ஜெயித்த வந்த அமிர்தலிங்கம் அப்போது கேட்ட இளைஞர்களிடம் " சற்று காலம் பொறுமையாக இருப்போம்" என்றார்.

யாழ்பாணத்தில் இருந்த ரோட்டரி கிளப் புற்றுநோய் சிகிச்சைக்காக நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சியை புனித பாட்ரிக் கல்லூரியில் நடத்திக்கொண்டுருக்கும் போது அனுமதி சீட்டு வாங்காமல் உள்ளே புகுந்த காவல்துறையினரை இளைஞர்கள் கண்டிக்க அப்போது தொடங்கிய வன்முறையில் மொத்த யாழ்பாணமே சுடுகாடு போல் மாற்றம் பெற்றது.  யாழ்பாண மார்க்கெட் தீக்கிறையானது.
அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தான் தாக்கப்பட்டதிற்கு ஜெயவர்த்னேவிடம் கோபம் கொப்புளிக்க கேள்வியாய் கேட்க அப்போது அவர் சொன்ன வாசகம்.

" திருகோணமலையை தலைமையாய்க் கொண்டு தனிநாடு என்ற கோரிக்கையை பார்த்துக்கொண்டு சிங்கள மக்கள் எவ்வாறு பொறுமை காப்பார்கள்?  சண்டை என்றால் சண்டை. சமாதானம் என்றால் சமாதானம்" என்றார்.  எதிர்கட்சி தலைவர் பதவி அழும் கட்சி பதவியாய் மாற்றம் பெற்றது.

அப்போது நடந்து பாராளுமன்ற வாக்குவாதம் மேலும் கலவரங்கள் பரவ காரணமாய் இருந்து கொழும்பில் வாழ்ந்த அத்தனை தமிழர்களின் சொத்தும் சூறையாடப்பட்டது.  மலையகத்தமிழர்கள் 60.000 பேர்கள் காடுகளுக்குள் புகுந்து நிர்கதியாய் மாறிப்போனார்கள். 100 கோடி மதிப்புள்ள தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் ஆனது.

இந்தக் கலவரத்தின் மற்றொரு கிளைநதி, யாழ்பாணத்தில் இருந்த பல்கலைகழகத்தை மொத்தமாக வெறுத்துக்கொண்டுருந்த சிங்கள மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப் பெற்ற கலவரத்தீ மொத்த தமிழர்களும் வாழ்ந்த அத்தனை பகுதிகளுக்கும் பரவி கோரத்தாண்டவம் ஆடியது.

மொத்தமாக அஹிம்சைவாதியான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் வலு இழந்து போனதும், ஹிம்சையான பிரபாகரன் ஆயுதப்பாதை வலுவடைந்துக் கொண்டு மாற்றம் பெற்றதும் வலியான தமிழர்களின் வாழ்வுரிமை கோரச் சுவடுகள் தொடக்கம் பெற்றதும் 1977ல் தொடங்கி தொடர்ந்து கொண்டு இருந்த கலவரங்கள்.

1 comment:

புலவன் புலிகேசி said...

அஹிம்சை எல்லாம் வேலைக்கு ஆகாமல் ஹிம்சையில் இறங்கி போராடுகிறார்..பார்ப்போம் நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிட்டும்..