Thursday, December 10, 2009

பிரபாகரன் சர்வாதிகாரம் காரணம்

தனிமைவிரும்பி?

"எனது பள்ளிப்பருவத்தில் என்னை கவர்ந்தது இந்திய சுதந்திரப் போராட்டமே. ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை முன்னிறுத்தி வளர்க்கப்பட்ட சூழலில் தான் நான் வளர்க்கப்பட்டேன். வெளியாட்களுடன் பழக அனுமதிக்கப்படவில்லை"

ஓழுக்கம்?

"எனது தந்தை (வேலுப்பிள்ளை) அவரது நடத்தையாலே எனக்கு முன் மாதிரியானார். அவர் உணவில் கருவேப்பிலையைக்கூட உண்ண மாட்டார். அவர் அரசாங்க மாவட்ட (நில அளவை) அதிகாரி. அவர் நடந்து சென்றாலே புல்வெளிக்குக் கூட காயம்படாதவாறு நடந்து செல்வார் என்று எம் பகுதி மக்கள் கூறுவார்கள்.  என்னை குற்றச் சாட்டும் பொழுதுகூட அப்படிப் பட்டவருக்கு இப்படியொரு பிள்ளையா என்பார்கள்.  அவர் மிகவும் கடுமையானவர். மொத்த குடும்ப நிகழ்வுகளையும் காரண காரியங்களோடு தோழமையோடு உரையாடுவார். எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவர் உருவாக்கிய புரிந்துணர்வு முக்கிய காரணம். அமைதியாக வாழ்ந்த அவரது வாழ்க்கை முழுக்க மொத்த இனக்கலவரங்களையும் வெறும் வார்த்தைகளாக உரையாடல் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது.வாழ்க்கை இழந்தவர்கள் இழந்து கொண்டே தான் இருந்தார்கள்"

நோக்கம்?

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நேதாஜியின் பங்கு என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைப்பருவம் முதலே அவரின் ஆன்மிக தேடலில் இருந்த போதும் திரும்பி வந்த போது நான் தனிமையாக தனி ஆளாக சுற்றி கானக வாழ்க்கை வாழ்ந்த போது இவைகள் தான் என்னை அடைகாத்தன. குறிப்பாக " எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை எமது மண்ணின் விடுதலைக்காக நான் போராடுவேன்"  இந்த வார்த்தைகள் எனக்குள் உருவாக்கிய தாக்கம் தான் இறுதி வரை இழுத்து வந்தது".

எண்ணங்களின் தாக்கம்?

" அநீதிக்கு எதிராக திரும்பத் தாக்கியவர்கள் என பலரது வரலாறும் வாழ்க்கையும் எனக்கு பிடித்தமாக இருந்தது. சிங்களிர்களின் கொடூர எண்ணங்களும், கொடுமையாக (1958) தாக்குதல்களும் தினந்தோறும் தினசரி வாயிலாக படித்துக்கொண்டே வந்த போது உருவாக்கிய தாக்கம் மேலும் என்னை என் பாதையை உறுதிபடுத்தியது"

கடைசி வரையிலும் கடைபிடித்த இயற்கை என் வழிகாட்டி?

" தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்துருக்கும் மத நம்பிக்கைகளை, பாண்டுராவில் உள்ளே உறங்கிக்கொண்டுருந்த புரோகிதரை ஒரு கயிற்றுக் கட்டிலில் கட்டி மொத்தமாக பெட்ரோல் ஊற்றி சிங்களர்கள் எரித்த போதும், மக்கள் அந்த நிகழ்வுகளையும் செய்தியாகவே பார்த்த போது படித்த போதும், மத எண்ணங்களை விட திரும்பி தாக்க முடியாத எங்களது மக்களின் எண்ணங்கள் எனக்கு வேறு விதமான தாக்கத்தை உருவாக்கியது"

வாசித்த அனுபவமும் வாழ்க்கையை நெறிபடுத்தியவைகளும்?

நடந்து கொண்டுருக்கும் இனகலவரங்களையும், குறிப்பாக 1958 அன்று நடந்த மொத்த கோரங்களையும் வீட்டில் பெற்றோர்கள் பேசிக்கொள்ளும் போதும் உருவான தாக்கம் அளவிடற்கரியது. அப்போது சென்னையில் இருநது வரும் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் இதழ்களில் வரும் போர் பற்றிய செய்திகளை ஆர்வமாய் படித்து தெரிந்து கொள்வதுண்டு. மேலும் மகாபாரதம் சொல்லும் "நன்மையை தீமை அழித்து ஒழிக்கும். இறுதியில் வெல்லும்"  என்ற வார்த்தைகள் என்னுடைய வலிமையை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தது.  நான் பள்ளியில் படிக்கும் போது ஹோம் கார்டு பயிற்சிக்காக வி நவரத்னம் என்ற ஆசிரியரிடம் பயின்றேன்.  அவர் தமிழ் சமஷ்டி கட்சியில் இருந்து வெளியேறியவர். பல இளைஞர்களும் அவரைத் தொடர்ந்து வெளியேறினார்கள். அவர் பல நாடுகளில் நடக்கும் போராட்டங்களையும் விரிவாக எடுத்துரைப்பதோடு பாராளுமன்றத்தால் எதிர்காலத்தில் இலங்கையில் எதுவும் தமிழர்களுக்கு உருவாக்காது என்றவர். அப்போது என்னுடைய வயது 15.  அப்போது தான் என்னுள் உருவான தாக்கம் " நமக்கென்று ஒரு தனி நாடு இங்கு வேண்டும்.  நாமும் திருப்பித் தாக்க வேண்டும்"


ஆதர்ஷ்ண நாயகர்கள்?

" வரலாற்றில் நெப்போலியன் எழுச்சி, மகாபாரதத்தில் பீமன், கர்ணன் இவர்களின் குணாதிசியங்களையும், விவேகானந்தர் சொற்பொழிவு மூலம் கோர்த்து சேர்த்த போது மொத்தமாக இளைஞர்களின் மொத்த சக்தியும் எனக்கு புதிய புரிந்துணர்வை உருவாக்கியது."

பக்தி உருவாக்கிய தாக்கம்?

" ஊரில் ஆன்மிக சொற்பொழிவுகள் (கிருபானந்த வாரியார்) எங்கு நடந்தாலும் விடாமல் போய்க் கேட்டுக் கொண்டே இருப்பேன். பார்த்த சாக்ரடீஸ் நாடகத்தில் உள்ள கதாபாத்திரம் வாயிலாக ஒப்பிட்டுக்கொள்வதுண்டு.  நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.  ஆனால் செய்வது அத்தனையும் வலிமையாக அவர்கள் உருவாக்கிய வலியை உருவாக்கிய வடுக்கள் மறையும் அளவிற்கு மக்களுக்கு வழிகாட்டும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று உள்ளுற உணர்வாக மாற்றம் பெற்றுக்கொண்டே வளர்ந்தேன்"

ஆயுதம் மட்டுமே சிறந்தது?

" ஆயுதங்கள் இல்லாமல் அமைதி வழியிலேயே அவர்களிடம் வாழும் எம் மக்களை அவர்களால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைகளும் வாழ்வாதாரத்தை சீர் குலைத்துக்கொண்டு இருந்ததே தவிர வழி தெரிவதாக தெரியவில்லை. ஆயுதம் மூலம் மட்டுமே இவர்களின் அடக்குமுறையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதில் உறுதியாய் இருந்தேன்"
குடும்பத்தை ஒதுக்கி வாழ்ந்த வாழ்க்கை?

" 19 வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை தொடங்கி விட்டேன். குடும்பத்துடன் இருந்தால் அது மேலும் மேலும் பல தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் என்று உணர்ந்து 1973 முதல் 1983 வரை தலைமறைவு வாழ்க்கையை அறிமுகம் செய்தது. இராணுவத்தின் வெறியான தேடல்கள் அத்தனையும் என்னையும் என் வெற்றிக்கான பாதையையும் கற்றுத்தந்தது"

அரசியல் கொள்கை?

" 33 ஆண்டுகள் இலங்கை பாராளுமன்றத்தில் ஒலித்த எந்த வார்த்தைகளுக்கும் மதிப்பு இருந்ததாக அவர்களின் போராட்டம் எதையும் உணர்த்தவில்லை.  மக்கள் அரசியல் தேவை என்றாலும் அது வெறும் வார்த்தைகளால் கொண்டு சேர்க்கப்படும் போது இவர்களுக்கு எங்களின் மக்களின் வலியை புரிந்து கொள்ளும் திராணி இல்லாத காரணங்களினால் என்னுடைய ஆயுதப்போராட்டங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் வலுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது.  மாற்றம் காணாத வாழ்க்கை அத்தனையும் இரு பக்கமும் வலியை உருவாக்கிக் கொண்டே இருந்தாலும் அவ்வப்போது கிடைத்த வழிகள் ஒவ்வொன்றும் நான் தேர்ந்தெடுத்த பாதை எனக்கொன்றும் தவறு போல் எனக்கு உணர்த்தவில்லை"

தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதை?

" இந்திய அரசியல் சுதந்திர வரலாற்றில் மகாத்மாவுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவிற்கு நேதாஜிக்கும் முக்கிய இடம் உண்டு.  இல்லாவிட்டால் இன்று சீனார்கள் டெல்லிவரைக்கும் வந்து ஆளுமை புரிந்து இருப்பார்கள்.  எங்கள் ஆயுதப்போராட்டத்தை குறை சொல்பவர்கள் அத்தனை பேரும், இந்தியா இன்று வளர்த்துக்கொண்ட இராணுவ மேலாதிக்கத்தினால் மட்டுமே இன்றும் ஆசியா நாட்டில் ஒரு வல்லரசாக இருக்கிறது.  அமைதி முக்கியம் சொலும் எந்த சர்வதேச நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆயுதங்களையும் வளர்த்துக்கொண்டு தான் வளர்ந்துள்ளது"

இரக்கம் என்பது?

வெளிப்படையாகச் சொல்லப்போனால் உலகத்தில் உள்ள மொத்த இராணுவ வாழ்க்கை என்பதே இயல்பாகவே வெளியே அத்தனை சீக்கிரம் தெரிந்து விடாத இரக்கமில்லாத தன்மையை உடையது. எங்களுடைய எதிரிகளால் வெளியே பரப்புரையாக சொல்லபடும் எந்த விசயங்களையும் நான் பொருட்படுத்தியதே இல்லை.  காரணம் உண்மையான விசயங்கள் உள்ளே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும். பரபரப்பு ஊடகங்களுக்கு அது தேவையில்லாத விசயங்கள். கண்ணீரும், கதறலும் அவர்களுக்கு வியாபாரம்.  எங்களுக்கு அதை தீர்க்க வேண்டிய கடமை"

சகோதர யுத்தங்கள்?

" ஆயுதங்கள் கொண்டவர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்படுகிறார்கள்.  தவறு இல்லை.  ஆனால் அவர்களிடம் அடிப்படையில் இல்லாத ஒழுக்கம் ஒரு சர்வாதிகாரியை அறிமுகப்படுத்துமே தவிர மக்களுக்குத் தேவையான எந்த அதிகாரத்தையும் தந்து விடாது.  இரக்கம் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் எங்களுடைய ஆயுதங்கள் இரக்கம் இல்லாமல் செயல்படும்.  அப்படி செயல்படவில்லை என்றால் எங்கள் வலியை, வலிமையை,எதிர்பார்க்கும் சுதந்திர வாழ்க்கை வந்து அடையாது.  கொலை,கொள்ளை,மேலாதிக்கம் போன்ற தொடக்க கால சகோதரர்களால் எங்களுடைய வழிகாட்டலை தவறு என்று உணர்ந்தவர்களை வேறு எந்த வழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்? என்னை சர்வாதிகாரி என்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் ஓப்பிட்டுக்கொள்வதில்லை. என்னுடைய ஆசை மக்களின் சுதந்திரம்.  ஆனால் அவர்களின் ஆசை மொத்தமும் அவர்களின் இருப்பு.  எந்த சூழ்நிலையிலும் சமாதான கதவை நான் மூடி வைத்ததே இல்லை.  எல்லா நல்ல வாய்ப்புகளையும் அடைபடும் சமயத்தில் மட்டுமே என்னுடைய கொள்கைகள் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது"

மாவீரர்கள்?

சயனைடு சுவைத்து உண்டவர்கள் அவர்கள் மறைமுகமாக எங்கள் போராட்டத்திற்கு வலிமை சேர்த்துவிட்டு செல்கிறார்கள். எங்கள் இயக்கத்தில் நூற்றில் பத்து பேர்கள் கூட எதிரிகளின் கையில் சிக்கி விடமாட்டார்கள். சிக்கினால் என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள்.  போராட்டத்தில் உள்ள தலைமைப் பொறுப்புகள் மட்டும் ஆராதனைக்குரியவர்கள் அல்ல.  வாழ்வில் பங்கெடுத்த ஒவ்வொரு வீரரும். அதனால் அவர்களுக்கு உண்டான பதில் மரியாதை மாவீரர் தினம்.  தாங்களும் மதிக்க்ப்படுகிறோம் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது"

ஜனநாயகம்?

என்னுடைய கொள்கைகள் சரியில்லாதவைகள் என்றால் ஜனநாயகப் பாதையில் சென்ற தகுதியானவர்கள் வென்றெடுத்த விசயங்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  நாங்கள் தமிழின காப்பாளர்கள் என்று வந்தவர்கள் தாங்கள் விலைபோன நிகழ்வுகளையும் உற்று நோக்க வேண்டும். சிங்கள பேரினவாத தந்திர அரசியல் என்பதையும் அவர்களுக்கு எது சரியான மொழி என்பதையும் புரிய வைக்கும்.

முடிவும் முற்றும்?

நான் அரசியல்வாதியல்ல.  பேச்சுக்கு முன் செயலில் காட்டி நமக்கான உரிமையை வென்று அடைந்த பிறகு தான் பேச்சுக்கு தயாராக வேண்டும்.  காரணம் சிங்களர்களின் ஆதிகம் என்பது 30 வருடங்கள் கடந்தும் கொள்கைகளால், இரக்கமற்ற குணத்தால், தெளிவான தந்திர முன்னேற்றம் கொண்ட போலியான ஜனநாயகத்தை நாம் வென்று எடுத்து நாம் முன்னேறியவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களும் நாம் யார் என்று புரியவைக்கும். என்னுடைய காலத்தில் இந்த சுதந்திரப் போராட்டம் முடிவடையும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.  நான் ஒருவன் முயற்சியில் இருக்கின்றேன்.  நான் வெல்லாவிட்டால் எனக்குப் பிறகு வேறு ஒருவர் வந்து இதை தொடர்வார்கள்.  தீர்வு என்பது சரியான முறையில் தீர்க்கப்படாத வரையில் இந்த போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்?

ஆயுதமா அன்பா என்பது சிங்களர்களின் கையில் தான் இருக்கிறது?

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

//ஆயுதமா அன்பா என்பது சிங்களர்களின் கையில் தான் இருக்கிறது?//

ஆழ்ந்த பதிவாக இருக்கு,.. நல்ல பகிர்வுங்க நன்றிகள்

லெமூரியன்... said...

அன்புக்கான அர்த்தத்தையே அவர்கள் (சிங்களர்கள்) ஆயுதத்தின் மூலமே பார்த்தவர்களாயிற்றே??...நல்ல பகிர்வு..!

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு...பகுதி பிரித்து விளக்கியமைக்கு நன்றிகளும்

Unknown said...

பிரபாகரனின் குடும்ப போட்டோ அருமை. நல்ல பதிவு

Vijay said...

Hi friend this is vijay here.. ur doing a really good job.. can we exchange links..

தமிழ் உதயம் said...

உலகம் எப்போதும் வெற்றி பெற்றவனின் அநியாயத்தை பார்ப்பதில்லை. உலகம் எப்போதும் தோற்று போனவனின் நியாயத்தையும் பார்ப்பதில்லை..

நிகழ்காலத்தில்... said...

பிரபாகரன் அவர்களின் கருத்துகளை தெளிவாக அறிந்து கொள்ளும் வண்ணம் வழங்கியமைக்கு நன்றி.

படித்தவுடன் மனம் சற்றே கனத்தது..

Unknown said...

அண்ணே உங்களை வணங்குகிறேன்...

Anonymous said...

எங்கள் இயக்கத்தில் நூற்றில் பத்து பேர்கள் கூட எதிரிகளின் கையில் சிக்கி விடமாட்டார்கள். சிக்கினால் என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள் ---
பாவம் இவர்தான் உணராம போய் மாட்டி........